தகவல் கற்றுகொள்வோம்
தினம் தினம் புது தகவல்கள் கற்றுகொள்வோம்
Saturday, January 12, 2013
வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்
Labels:
என்னுடைய சிந்தனைகள்
Wednesday, January 2, 2013
பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்
வீட்டில்
இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. எனவே
அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க பெண்கள் ஒரு சில
உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.
பசலைக்கீரை
பெண்கள்
நிச்சயம் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும்
முக்கியமாக பசலைக் கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள
வேண்டும்.
ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.
தானியங்கள்
பெண்களின் டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
மிளகாய்
கார
உணவுகள் உடல் எடையை குறைக்கும். மேலும் காரமான உணவுகள் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் தடுக்கும்.
ராஸ்பெர்ரி
பெர்ரி
பழங்களில் ராஸ்பெர்ரியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு செல்களை
கரைப்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் வேகத்தை குறைக்கும்.
இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
நட்ஸ்
நட்ஸில்
பாதாம் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். ஏனெனில் நட்ஸில் நார்ச்சத்து மற்றும்
வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே இதனை உணவு நேரங்களை தவிர்த்து, மற்ற
நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால், பசியானது நீண்ட நேரம் எடுக்காது.
ஆரஞ்சு
உடலில்
உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்த
உணவுப்பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, சிட்ரஸ் ஆசிட்
இருப்பதால் அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
எலுமிச்சை
எலுமிச்சை
மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு சிறந்த பெண்களுக்கான பானம். எலுமிச்சையும்
ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், அவை பசியை தூண்டாமல், கொழுப்புக்களை
கரைத்துவிடும்.
Labels:
அறிந்ததும் அறியாததும்
Friday, December 28, 2012
நல்லொழுக்கம் பேணுங்கள்
*
அடக்கம் இல்லாமல் ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட தியானம்
செய்து ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்ந்தவனுடைய வாழ்வு சிறப்பு உடையதாகும்.
*
அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்பவனின் துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த
தண்ணீர் துளிகள் ஒட்டாமல் விலகி ஓடுவதைப் போல் அவனை விட்டு அகலும்.
* வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல நீ அரண் செய்து கொள், ஊக்கமும் அறிவும் உடையவனாய் இரு.
மாசுக்கள்
அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம்.
அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
*
வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருபவனுக்கு
ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் நான்கு பயன்களும் அதிகரிக்கும்.
*
உடம்பின் எரிச்சலை அடக்கிக் காப்பதுடன், உடலை அடக்கப் பழக வேண்டும். தீய
ஒழுக்கத்தை ஒழித்து நல்ல ஒழுக்கத்தையும் பேணி காக்க வேண்டும்.
* வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதைக்கண்டு மிரளத் தேவையில்லை.
- புத்தர்
Labels:
அறிந்ததும் அறியாததும்
Wednesday, December 26, 2012
உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா?
குழந்தைகள்
பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில்
அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள்
பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால்,
எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும்
பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.
மேலும் சில குழந்தைகள் 2
வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய
குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை
குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும். இப்போது அந்த
மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப்
பார்ப்போமா!!!
* குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும்
பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள்
புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக
பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல்
இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து
பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க,
அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும் போது,
அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச
வேண்டும்.
* ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது,
அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை
அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு
உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும்.
முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப
திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த
பயமுமின்றி பேசுவார்கள்.
* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய
புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை
நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால்,
அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி,
அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும்
மறக்காமல் இருப்பார்கள்.
Labels:
அறிந்ததும் அறியாததும்
Monday, December 24, 2012
இட்லி பற்றி சில தகவல்கள் தெரிந்து கொளுங்கள்
இட்லி என்றால் என்ன...?
நண்பர்களே இட்லி க்கு தமிழ் பெயர் என்னனு தெரியுமா.? - பெயர்க்காரணம், விளக்கம் தெரிஞ்சுக்கோங்கப்பா...
இட்டவி(இட்டு+அவி).இட்டவியே காலபோக்கில் மருவி இட்லி ஆகிவிட்டதாக கூறுவா்.
இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு.பண்டம்
இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.
தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு.
இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது
. வெண்மையான நிறத்தில் இருக்கும்.
அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது
இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து
மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
- சட்னி
- சாம்பார்
- மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி
- சர்க்கரை
- தயிர்
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு ஆகும்.
எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
செய்முறை
தேவையான பொரு
ட்கள் :
- புழுங்கல் அரிசி - 400 கிராம்
- உளுத்தம் பருப்பு - 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
ஒரு
பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில்
நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு
புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
அரிசியையும்
உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம்
ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி
நேரம் போதுமானது.
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும். பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லிக்கு
3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள்
இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.
இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.
இட்லி
செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள்
கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட
சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.
Labels:
அறிந்ததும் அறியாததும்
குழந்தைகளை தைரியமாக இருக்கச்செய்வது எப்படி?
பொதுவாக
குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு
உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது
பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை
போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி
பயத்தை போக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம்
பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு 'பூச்சாண்டி' காட்ட சொல்லும் பயமானது.
மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில
சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக
விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது
குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!
1.
சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி
காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது
என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி
கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு
அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று
சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.
ஏனெனில் குழந்தைகள் உலகத்தை
பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த
உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள்
பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து
கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது
போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும்
பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய
வைக்க வேண்டும்.
2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின்
பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர்
அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல
வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
3.
குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக
சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள்
எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.
4.
குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை
பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல.
அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது.
அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன்
பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி
செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.
5.
குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில்
குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது
அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும்
குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது
மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே
உருவாகும்.
6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும்
செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து
கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி,
பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.
7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு
தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு
செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள
வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும்
மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும்
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.
8. குழந்தைகள்
வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு
அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி
படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது
சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம்
மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க
வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து
விடுவிக்க முடியும். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத்
தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Labels:
அறிந்ததும் அறியாததும்
Saturday, December 22, 2012
கணித மேதை இராமானுஜம் - 125 வது பிறந்தநாள்
வீட்டிற்கு
முன்பு பெண்கள் போடும் கோலம் முதல் வானில் சுற்றித்திரியும் கோளங்கள் வரை
எல்லாமே ஒருவித கணக்கில் தான் இயங்கிங்கொண்டிருக்கிறது.
பள்ளிக்கூடத்தில்
படிக்கும் காலங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதம் என்பது பெரும்
துயரம் என்பதை நாம் உணர்வோம். அவர்களுக்கு ஆசிரியர் சொல்லும் ஒரே அறிவுரை,
"கணிதத்தை காதலி... விரைவில் முடிக்கலாம் என.."
எனவே அந்த வகையில் உலகத்தை கணிதம் மூலமாக புரட்டிப்போட்டவர்கள் மூவரே.
1. லியோனார்டு ஆய்லர் (1707-1783),
2. கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851),
3.பிரமாண ஆத்தில் பிறந்த சீனிவாச இராமானுஜன்(டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920).
இவரின்
கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை
வளர்க்கவும், இவரது பிறந்த தினமான டிசம்பர் 22 "தேசிய கணித தினமாக"
கடைபிடிக்கப்படும் என கடந்தாண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
உலகின்
ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது.
பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். எனவே நாம் பூஜ்ய
தேசத்தவர்கள் என சொல்லிக் கொள்ளலாம். ஆரியபட்டாவுக்கு பின், 16ம்
நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. பின்னர் 20ம்
நூற்றாண்டில் இராமானுஜன் மூலம் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத்
தொடங்கியது.
பிறப்பு மற்றும் வாழ்க்கை
இவர் 1887ஆம் ஆண்டு
டிசம்பர் 22ம் திகதி தமிழக மாநிலத்தில் ஈரோட்டில் பிறந்தார். 2வது வயதில்
லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில்
இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து
கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார்.
விடை காண முடியாத 6 ஆயிரம்
தேற்றங்களை நிரூபிக்க முயன்ற போது மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்
ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக
மேனேஜர் எஸ்.என்.அய்யர், இராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும்,
நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை.
இருப்பினும், 1913ல் ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு
மீண்டும் அனுப்பினார்.
அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண
மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து இராமானுஜனை
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று 1914ம் ஆண்டு
பிரித்தானியா சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை
ஈர்த்தது. இராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு
உண்டு.
உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் பிரித்தானியா
வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு 1917ல்
இந்தியா திரும்பினார். பின்னர் இரண்டு, மூன்று வருடங்கள் வாழ்ந்த கணிதமேதை
இராமானுஜம் 1920ல் மறைந்தார்.
Labels:
அறிந்ததும் அறியாததும்
Subscribe to:
Posts (Atom)