Saturday, January 12, 2013

வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்



இதுவரை வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என பலவாறு யோசித்திருப்போம். ஆனால் வீட்டில் அழகான பெயிண்டிங் அல்லது இயற்கைக் காட்சிப் படங்களை மாட்டுவதன் மூலமும், வீட்டை அலங்கரிக்கலாம் என்ற யோசனை சிலருக்கு இருக்காது. 
இந்த மாதிரியான படங்களை வீட்டில் மாட்டுவதால், வீடு பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, நம்மை சூழ்ந்திருக்கும் சூழ்நிலையானது அழகாக இருந்தால், அவை மனதிற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். சொல்லப்போனால், படங்களை நேராக சுவற்றில் மாட்டுவதும் ஒரு வகையான கலை. அதில் ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. ஆனால் அதை எப்படி மாட்டுவது என்பதற்கு இதோ சில வழிமுறைகள் உள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டை அழகான படங்களால் அலங்கரியுங்கள். 
* சுவற்றில் படங்களை மாட்டுவதற்கு முன்னர், எந்த இடத்தில் மாட்டினால் அழகாக இருக்கும் என்று முடிவு எடுக்க வேண்டும். அதற்கு சில நேரம் செலவழித்து, நன்கு யோசித்து, அறையின் சூழல் மற்றும் லைட்டிங்கை பொருத்து அழகான படத்தை தேர்வு செய்யவும். பின் உதவிக்கு ஒருவரை வைத்து கொண்டு, படத்தை மாட்டும் இடத்தில் பென்சிலால் மார்க் செய்து கொள்ள வேண்டும். மேலும் அந்த படமானது, நமது கண்கள் பார்க்க ஒரு அடிக்கு மேல் என்ற கணக்கில் இருந்தால், அது அதிக அழகை கூட்டும்.

 * படங்களை மத்திய பகுதியில் வைப்பது சிறந்தது. அதை சரியாக மாட்ட கடினம் என கருதினால், அளக்கும் டேப் கொண்டு படத்தை மாட்டும் இடத்திற்கு மேல் மற்றும் கீழ் அளவுகளை அளந்து கொண்டால் எளிதாக இருக்கும். முக்கியமாக படத்தின் அளவையும் அளந்து கொள்வது சரியாக இருக்கும். * சரியான இடத்தை தேர்ந்தெடுத்து, அளவு செய்த பின் மார்க் செய்த இடத்தில் ஒரு ஓட்டை செய்ய வேண்டும். அதற்கு சுத்தி கொண்டோ அல்லது ட்ரில்லிங் மெசின் கொண்டோ ஓட்டை போடவும். சுவற்றில் துளை போடும் பொழுது, ஆணியின் அளவு மட்டும் துளை போடுவது நல்லது.

 * படங்களை மாட்ட ஏற்ற ஆணிகளை எடுக்கும் போது, அந்த ஆணி அந்த படத்தை தாங்க தக்கவாறு தேர்ந்தெடுத்தல் அவசியம்.

 * படங்களை மாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கும் போது, எந்த இடத்தில் எந்த படத்தை வைத்தால் சரியாக இருக்கும் என்று நன்கு கணித்து, பின் மாட்ட வேண்டும். படங்களானது, குழந்தைகள், குடும்ப படங்கள் அல்லது கையால் வரைந்த படங்கள் என்று இருந்தால் சரியாக இருக்கும். ஏனெனில் சில படங்கள் அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது. உதாரணமாக சாமி படங்கள் அனைத்து இடங்களிலும் வைக்க முடியாது. எனவே அனைத்தையும் சரி பார்த்து, பின் பொருத்த வேண்டும்.

Wednesday, January 2, 2013

பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்



வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. எனவே அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க பெண்கள் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.

பசலைக்கீரை

பெண்கள் நிச்சயம் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக பசலைக் கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.

தானியங்கள்

பெண்களின் டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

மிளகாய்

கார உணவுகள் உடல் எடையை குறைக்கும். மேலும் காரமான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் தடுக்கும்.

ராஸ்பெர்ரி

பெர்ரி பழங்களில் ராஸ்பெர்ரியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு செல்களை கரைப்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் வேகத்தை குறைக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

நட்ஸ்

நட்ஸில் பாதாம் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். ஏனெனில் நட்ஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே இதனை உணவு நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால், பசியானது நீண்ட நேரம் எடுக்காது.

ஆரஞ்சு

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, சிட்ரஸ் ஆசிட் இருப்பதால் அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு சிறந்த பெண்களுக்கான பானம். எலுமிச்சையும் ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், அவை பசியை தூண்டாமல், கொழுப்புக்களை கரைத்துவிடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...