Wednesday, September 26, 2012

காதல் கவிதை : காதல்


இந்த காதல்
என்னை
அழகாய் காட்டுகிறது..

இந்த காதல்

என்னை
தனிமை படுத்துகிறது...

இந்த காதல்
என்னை
சந்தோஷமாய் வைக்கிறது ..

இந்த காதல்
என் இதயத்தை
துடிக்க வைக்கிறது..

இந்த காதல்
என் கண்களை
திறந்து வைக்கிறது..

இந்த காதல்
என் நகங்களில்
பூப்பூக்க வைக்கிறது..

இந்த காதல்
என்னை
அழ வைக்கிறது..

இந்த காதல்
என்னை
அடிமை படுத்துகிறது..

இந்த காதல்
என்னை
தள்ளாட வைக்கிறது..

எல்லாவற்றிற்கும் மேல்,

இந்த காதல்
பிறப்பின் ரகசியத்தையும்,
இறப்பின் அர்த்தத்தையும்
புரிய வைக்கிறது...

காதலுடன்
ப.சுரேஷ்..

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...