Sunday, September 9, 2012

தமிழக முதல்வரை கேவலமாக சித்தரித்த சிங்களம் நாளிதழ்: கடுமையான கண்டனம்


சிங்களம் நாளிதழ் நம்முடைய முதல்வரை முகம் சுளிக்கும் வகையில் கேலி சித்திரம் வெளியிட்டு இருப்பதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

நாம் அனைவரும் தமிழராக இந்தியராக ஒரு மித்து செயல் பட வேண்டும். பெண்களை கேவலபடுத்தும் இது போன்ற செயல்களை ஒரு போதும் நாம் அனுமதிக்க கூடாது.

முதல்வரை மட்டுமல்ல வேற எந்த பெண்ணையும் இப்படி கேவலமாக சித்தரித்தாலும் அது கண்டிக்கதக்கதே .... ஒரு மாநிலத்தின் முதல்வரான ஒருவருக்கே இந்த நிலை எனில் சிங்களன் கையில் சிக்கிய தமிழ் பெண்களையும்...போரில் சிக்கிய போராளி தமிழச்சிகளின் நிலையை எண்ணி பாருங்கள்....

சிங்கள நாளேட்டில் தமிழக முதல்வர் குறித்த கேவலமான கேலிசித்திரம், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நாட்டில் கண்டன கூட்டமோ, மாநாடோ, ஆர்பட்டமோ, கடிதம் எழுதுதலோ, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தன் இனத்தவரையே கைது செய்தலோ நடை பெறவில்லை.

இதற்கு நாம் தமிழர் மற்றும் இந்தியர் என்ற உணர்வில் இதை கடுமையாக கண்டிக்க வேண்டும். இதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

பெண்களை இழிவு படுத்தும் இந்த செயலுக்கு ஆதிமுக தொண்டர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழர் என்ற முறையில் நாம் அனைவரும் கட்சி பாகு பாடின்றி கண்டனம் தெரிவிப்போம்.........

அந்த கேவலமான சித்திரத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்ற காரணத்தினால் லிங்க் இணைக்கப்படவில்லை

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...